
நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட முரண்பட்ட மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான அறிக்கை நீதி பரிபாலன முறையை மதிக்காத போக்கை காட்டுகிறது.
மேலும் நாட்டின் முதன்மை தலைவராக விளங்கும் மாமன்னரின் பொறுப்பு மற்றும் அதிகாரத்தை புறந்தள்ளும் வகையில் இது உள்ளது.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின், நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அஸாஹர் ஆகியோரும் பதவி துறக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானத்தை தாக்கல் செய்து இருப்பதாக அவர் சொன்னார்.
