25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

எரிசக்தி இயற்கை வள அமைச்சர் டத்தோ சம்சூல் அனுவார் நஸ்ரா பதவி விலகினார்

பெரிக்காத்தான நேஷனல் அரசாங்கத்திலிருந்து எரிசக்தி இயற்கை வள அமைச்சர் டத்தோ சம்சூல் அனுவார் நஸ்ரா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நான் அம்னோ கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். அந்த வகையில் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன்.
பெரும் சவால்களை எதிர்நோக்கி இருக்கும் இந்த தருணத்தில் கட்சிக்கு தொடர்ந்து உழைப்பேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இவரின் ராஜினாமா பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்க வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles