
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை 11 எம்பிக்கள் மீட்டுக் கொள்கிறார்கள் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி நேற்று அறிவித்தார்.
ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்ற சத்திய பிரமாணத்தையும் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் வழங்கியிருப்பதாக டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.
மேலும் எரிசக்தி இயற்கை வள அமைச்சர் டத்தோஸ்ரீ சம்சூல் அனுவார் நஸ்ரா தமது அமைச்சர் பதவியும் ராஜினாமா செய்தார்.
இவருடன் சேர்ந்து மொத்தம் 12 அம்னோ எம்பிக்கள் பிரதமருக்கு வழங்கிய ஆதரவை
மீட்டுக் கொண்டனர்.
மேலும் இன்னும் இரண்டு எம்பிக்கள் பிரதமருக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று சத்திய பிரமாணத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஆக மொத்தம் இதுவரை 14 எம்பிக்கள் ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளனர்.
