
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்று கூறுவது பெரும் சந்தேகம் நிலவுகிறது.
ஆகவே அவர் பெரும்பான்மையை நிரூபிக்க உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுவது நல்லது என்று வழக்கறிஞர் அப்துல் சுக்கோர் தெரிவித்தார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அம்னோ கட்சி சார்பில் 14 எம்பிக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் பிரதமருக்கு இப்போது 111 எம்பிக்கள் ஆதரவு இல்லை என்று தெரிய வருகிறது.
ஆகவே அவர் நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றார் அவர்.
