
சிரமமான காலங்களில் மட்டுமல்லாது,எந்த சமயத்திலும் யாரும்எங்களுக்கு உதவ முன்வருவதில்லையென தங்களின் மனஜவேதனையை
வெளிப்படுத்திய தென் செபராங் பிறை சுங்கை ஜாவி,பெர்கம்போங்கான் ஜாவியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பிரபல வர்த்தக நிறுவனமான சுபம்
கேஷ் அண்ட் கேரி நிறுவனம் உடனடி உதவிகளை வழங்கியது.
நேற்று முன்தினம் புலனத்தின் வழியாக தங்களின் பிரச்சனைகளை
வெளிப்படுத்திய 39 குடும்பங்களுக்கு அந்நிறுவனம் உணவுக் கூடைகளை வழங்கியது.
சம்பந்தப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்த நிறுவனத்தின்
உரிமையாளர் முருகேசன்,அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு தேவையான பொருட்கள் அடங்கிய உணவுக் கூடைகளை வழங்கினார்.

Well done Subam’s owner for your fast action on helping those are suffering due to this pandemic. Well done and God bless to Mr. Harikarthikesan, one of the Perkampungan Jawi resident who bravely bring out the issue and getting help for others in that area. Bravo brother