
மலேசியாவில் ஒட்டுமொத்த காய்கறிகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வர்த்தகத் தளமாக செலாயாங் பசார் போரோங் விளங்கிக் கொண்டிருக்கிறது.
இங்கு பணிபுரியும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள் அனைவரிடமும் தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கோவில் 19 நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் இன்று அனைவரிடமும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இங்கு இருபது ஆண்டுகளுக்கு மேலாக காய்கறி வியாபாரம் செய்து வரும் மக்கள் செல்வன் டாக்டர் மணி செல்வன் மற்றும் லோகநாதன் ஆகியோர் கூறுகையில் அனைவரிடமும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை வரவேற்றனர். அப்போதுதான் யாருக்கு நோய்த்தொற்று இருக்கிறது என்பது கண்டுபிடிக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
