
எல்லாம் பாதைகளும் அடைக்கப்பட்டு இருப்பதால் பிரதமர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி தெரிவித்தார்.
இன்னமும் பிடிவாதம் பிடிக்காமல் அவர் பதவி விலகுவது நல்லது.
தனது பதவியை தற்காத்துக்கொள்ள அம்னோ உட்பட எதிர்க்கட்சிகளிடம் அமர்ந்து பேச அவர் முன்வந்திருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தோல்வி கண்டு விட்டார். பெரும்பான்மையை இழந்து விட்ட அவர் கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
