
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை இழந்து விட்ட பிரதமர் டான்ஶ்ரீ மொகிதீன் யாசின், இன்று பிரதமர் பதவியிலிருந்து விலகக்கூடும் என்ற ஆருடங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான ஆதரவை அம்னோவைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை தொடர்ந்து டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பெரும்பான்மையை இழந்து விட்டார்.
இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம் மாலையில் நடத்தப்படவிருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் என அனைவரும் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் பதவி விலகுவதற்கான முடிவை எடுக்கலாம் என்று நம்பப்படுகிறது..
