
நாளை தனது பிரதமர் பதவியை டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்கிறார் என்று பெர்சத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் ரிடுவான் தெரிவித்தார்.
நாளை காலையில் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்.
அதன் பின்னர் இஸ்தானா நெகாரா வுக்கு செல்லும் அவர் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கிறார் என்றார் அவர்.
இன்று நடைபெற்ற பெர்சத்து கட்சியின் உச்ச மன்ற கூட்டத்தில் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இந்த முடிவை அறிவித்தார் என்று அவர் கூறினார்.
