25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

கோவிட் -19 ஒழிப்பு திட்டத்தில் பினாங்கு மாநில அரசின் நடவடிக்கைக்கு ஆளுநர் பாராட்டு

தற்போது மனிதர்களின் உயிரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கோவிட்
-19 தொற்றில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் பினாங்கு மாநில
அரசாங்கம் மேற்கொண்டு வரும் உதவிகளையும்,சேவைகளையும்
வெகுவாகப் பாராட்டுவதாக மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அகமட்
புசி அப்துல் ரசாக் கூறியுள்ளார்.
மக்கள் உதவி திட்டத்திற்கு
நிதியுதவி,உணவுக் கூடைகள் போன்ற சமூகநல உதவிகள்,பாதுகாப்பு
மனநலஆலோசனைகள் போன்றவையும் இதில் அடங்கும் என்றார்.மேலும்
தொழில்கள் பாதிக்கப்பட்டு வருமானம் இழந்து தவிக்கும் மக்களை
அரசாங்கம் நல்ல முறையில் கவனித்துக் கொண்டு வருவதும் சிறப்பாக உள்ளது என்றார்.
மேலும் பினாங்கு மக்களுக்கான தடுப்பூசி திட்டத்தில் பினாங்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது என
கூறிய அவர்,மக்கள் தொடர்ந்து எஸ்ஓபி நடைமுறைகளை உறுதி
செய்வதோடு,தடுப்பூசி நடவடிக்கைகள் தடையின்றி நடைபெற உறுதி செய்ய
வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles