
சிலாங்கூர் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் ஊழலை தடுக்கும் வகையில் பத்து அம்சத் திட்டத்தை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி அறிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் ஊழல் நடவடிக்கைளை துடைத்தொழிப்பதற்கு மாநில அரசு ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து பத்து திட்டங்களை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில துறைத் தலைவர்கள், அரசு சார்பு நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பாளர்கள் ஊழலுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திடுவதும் இதில் அடங்கும் என்று சுட்டிக்காட்டினார்.
