
சுமார் 3.8 பில்லியன் கூலிம் அனைத்துலக விமான கட்டுமானத் திட்டத்தினால் பினாங்கு மாநிலத்திற்கு குடிநீர் வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு மாநிலத்தில் அருகிலுள்ள சுங்கை மூடா ஆற்றோரப் பகுதியில் இந்த அனைத்துலக விமான நிலையம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுங்கை மூடா ஆற்று நீர் தான் பினாங்கு மாநில மக்களுக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
இங்கு அனைத்துலக விமான நிலைய கட்டுமானப் பணிகள் ஆற்றுநீருக்கு பெரும் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும்.
இதனால் பினாங்கு மாநில மக்களுக்கு நீர் விநியோகம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பினாங்கு நீர் விநியோக வாரியம் எச்சரித்துள்ளது.
வேறு பாதுகாப்பான இடத்தில் இந்த விமான நிலையம் கட்டலாம் என்று பினாங்கு மாநில நீர் விநியோக வாரியம் ஆலோசனையை கூறியுள்ளது
