
கோவிட் – 19 காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக பேரா மாநிலத்தில் 80 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று மாநில மகளிர் குடும்ப மற்றும் மக்கள் சமூகநல ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் வான் நோரஷிக்கின் வான் நோர்டின் கூறினார்.
மன அழுத்தம் ( 24 சம்பவங்கள்) பொருளாதாரம் (13 சம்பவங்கள்) நோய் ( 4 சம்பவங்கள்) போதைப்பொருள் மற்றும் மனநோய் ( 3 சம்பவங்கள் ) போன்ற சம்பவங்களினால் இவர்கள் மரணம் அடைந்தனர் என்று தெரிவித்தார்.
இதில் 66 ஆண்கள்,14 பெண்கள் என கூறிய அவர்,பாதிக்கப்பட்டவர்களில் 32 சீனர்கள்,29 இந்தியர்கள்,8 மலாய்க்காரர்கள் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் 11 என பேரா மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
