
அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அம்னோ பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி இன்று கொடி காட்டியுள்ளார்.
வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு பொதுத்தேர்வுக்கு முன்பாகவே அரசியலிலிருந்து ஓய்வுபெற தாம் திட்டமிட்டிருந்தேன்.
இருப்பினும் அம்னோ தலைவர்கள் மற்றும் தமது தொகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேர்தலில் போட்டியிட நேர்ந்தது.
அம்னோவின் அடுத்த தலைமுறை தலைவர்களான பிரதமர் இஸ்மாயில் சப்ரி, டத்தோஸ்ரீ இஷாமுடின் போன்றவர்கள் வந்துவிட்டதால் அரசிலிருந்து தாம் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று அவர் கூறினார்.
