
நாட்டில் நோய் தொற்றால் உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய சிறப்பு பிரார்த்தனை இன்று கிள்ளான் உத்தாமா அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் காலை நடைபெற்றது. டத்தோஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஏற்பாடு செய்த இந்த ஆத்மா சாந்தி பிரார்த்தனையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கலந்து கொண்டார். நோய் தோற்றால் இறந்தவர்களின் சடலங்களுக்கு ஈமச் சடங்கு செய்யமுடியாமல் நேரடியாக மின் சுடலையின் தகனம் செய்யப்பட்டது. அந்த வகையில் இவர்களின் ஆத்மா சாந்தி அடையும் வகையில் ஆத்மா சாந்தி இளைப்பாற சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறுக்கு மீசை தமிழன் மற்றும் மலேசிய சேவை இயக்கம் இந்த ஆத்ம சாந்தி பூஜையை சிறப்பாக ஏற்பாடு செய்தது.
