
வீடுகளை நிரமாணிப்பதற்கான விண்ணப்பங்களை சிலாங்கூர் மாநில அரசு பெற்றுள்ளது. நேற்று இந்த தகவலை சிலாங்கூர் மாநில வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்தார். இதில் 60,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மற்ற 20,000 வீடுகள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார். கட்டுமானத் துறை செயல்படுவதற்கு அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சு தாமதமாக அனுமதி வழங்கிய காரணத்தால் சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டத்தை தொடர்வதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
