
ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெற்கு ஆசியா நாடுகளுக்கான சிறப்புத் தூதராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய முன்னணி ஆட்சியில் துன் சாமிவேலு இப்பதவியின் வழி இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பல கட்டுமான மேம்பாட்டுத்திட்டங்களை வரைந்து நாட்டின் முதலீட்டுக்கு வித்திட்டார்.

தற்போது ஆசியா, மேற்கு ஆசியா, மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளுக்கான 3 சிறப்புத் தூதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் , அரசாங்கம் உடனடியாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரனை இப்பதவிக்கு நியமிக்க வேண்டும். இப்பதவியின் வழி தெற்காசிய நாடுகளில் மலேசியாவின் முதலீட்டுத் திட்டங்களை மேலும் அதிகரிக்க முடியும் என்று கெடா பாலிங் ம.இ.கா தலைவர் செகு இராமசாமி தெரிவித்தார்.
