27.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

ஓரின தகாத உறவு 9 மாத குழந்தை பரிதாப மரணம்
ஆடவன் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்டிருந்த ஆடவன் ஒருவன் ஒன்பது மாதம் நிரம்பிய ஆண் குழந்தையிடம் தகாத ஓரின உறவு புரிந்த சம்பவத்திலும் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.
இந்த சம்பவம் கடந்த மாதம் ஏப்ரல் 27ஆம் தேதி கிளானா ஜெயாவின் உள்ள ஒரு வீட்டில் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்தபோது அந்த குழந்தையின் தாயார் வீட்டை சுத்தம் செய்திருக்கிறார். அப்போது போதைப்பொருள் உட்கொண்டிருந்த ஆடவன் ஒரு அறையில் அந்த பச்சிளம் குழந்தையிடம் இந்த கொடூரத்தை புரிந்திருக்கிறார் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பக்குருடின் தெரிவித்தார்.
மூன்று வாரத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்ட 36 வயதான ஆடவன் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
குழந்தைக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டு விளங்குவதாக தலையாட்டிய அந்த ஆடவன், ஓரின தகாத உறவு புரியவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தான்.
கட்டாய மரண விதிக்கும் 302 குற்றவியல் பிரிவின் இவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles